தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு வெளியேறுவேன்!! -டொனால்டு டிரம்ப் ஆவேசம்-

ஆசிரியர் - Editor III
தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு வெளியேறுவேன்!! -டொனால்டு டிரம்ப் ஆவேசம்-

எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.

ஜோர்ஜியாவில் மாகாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியபோது ஜனாதிபதி அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுவது எனக்கு அழுத்தம் கொடுக்கிறது. 

ஒருவேளை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தால், வரலாற்றிலேயே மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வி அடைந்த எனது வாழ்க்கையே வீண் என கருதி நாட்டை விட்டு வெளியேறுவேன்எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அவரது போட்டியாளரான ஜோ பிடன் டிரம்ப்பை சந்திக்க “வாக்குறுதி?” என்ற தலைப்பில் ஒரு வெளியிட்டு உள்ள டுவீட்டில், டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு