புத்தாண்டில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்!!

ஆசிரியர் - Editor III
புத்தாண்டில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்!!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி 2021 புத்தாண்டு துவக்கத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டின் துணை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான ஜொனாதன் வான்-டாம் தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- 

அனைத்து தடுப்பூசிகளும் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் கட்டுப்பாட்டாளரால் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக மதிப்பிடப்பட வேண்டும்.

இன்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடவடிக்கைகள் அணுகலை மேம்படுத்துவதோடு நோயாளிகளைப் பாதுகாக்கும் தற்போதைய பாதுகாப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என கூறினார்.

தற்போது இங்கிலாந்தில்  7 லட்சத்திற்கும் அதிகமானவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைபெறுவோரின் எண்ணிக்கையானது 6 லட்சத்திற்கும் அதிகமானதாக உள்ளது. இதுவரை 43.5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு