கிளிநொச்சி - முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

வெளிநாட்டிலிருந்து வருகைதந்திருந்த நிலையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியிருக்கின்றார். 

இதேவேளை இன்றைய தினம் 114 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் புங்குடுதீவை சேர்ந்த பெண்ணுக்கும் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு