யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நுாற்றுக்கும் மேற்பட்டோரின் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு மற்றும் புங்குடுதீவு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள சுமார் நுாற்றிக்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணியதற்காக வடமராட்சி கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் 

யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுமார் நுாற்றிற்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும். இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையிலும், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்திலும் இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்கும் சிறப்பு விடுதி தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கின்றது. இன்றும் ஒருவர் சந்தேகத்தினடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளார். என பணிப்பாளர் மேலும் தொிவித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு