யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையை பாதுகாக்கவேண்டும்..! மத்திய அரசின் திட்டம் மிக ஆபத்தானது, முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையை பாதுகாக்கவேண்டும்..! மத்திய அரசின் திட்டம் மிக ஆபத்தானது, முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் எச்சரிக்கை..

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய், உளநல வைத்திய சாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சி 13ம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கம் என முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். 

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் புற்றுநோய் வைத்திய சிகிச்சைபிரிவு மற்றும் உளநல வைத்தியப்பிரிவினை, 

மத்திய அரசின் கீழ்எடுப்பதற்கான ஒரு கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் யாழில் இடம்பெற்றுள்ளது.அதனை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து யாழ்போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

இவை மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும், தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையினுடைய இரு விசேட பிரிவுகளாக இருக்கிறது. இதனை திடீர் என்று மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சி எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை இந்திய ஒப்பந்ததின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது அதிகாரபரவல் நோக்கிய முதலாவது படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அந்தவகையில் 13 வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வை 

மீண்டும் மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க முடியும்.போதனாவைத்தியசாலைகளும் விசேட தேவையின் கீழ் உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளையும் தவிர ஏனைய அனைத்து சிகிச்சை நிலையங்களும் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இருக்கவேண்டும். 

என்று 13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு