வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் விபத்து..! 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் விபத்து..! 3 பேர் படுகாயம்..

கிளிநொச்சி - முல்லைத்தீவு வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

புளியம்பொக்கணையில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் வெளிக்கண்டல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு