இராணுவ ரோந்து நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு..! குழப்பத்தில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
இராணுவ ரோந்து நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு..! குழப்பத்தில் மக்கள்..

வவுனியா நகரப்பகுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் திடீர் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 1 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்தினை மேற்கொண்டதுடன் மன்னார் பிரதான வீதி வழியாக சென்றிருந்தனர்.

அத்தோடு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை வழிமறித்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களிலே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு