கட்டுப்பாடற்ற வேகம் கன்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்..! 18 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor IV
கட்டுப்பாடற்ற வேகம் கன்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்..! 18 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்து இளைஞர்கள் கன்டர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில்   இன்று இடம்பெற்றது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி வேகமாக சென்ற இளைஞர் குழுவில் ஒருவர் உயிரிழந்ததுடன் இவ்வாறு உயிரிழந்தவர்   

நிந்தவூர் 4ம்  பிரிவைச் சேர்ந்த 18 வயது  மதிக்கத்தக்க  நஜாத்  அடையாளம் காணப்பட்டார். இவ்விபத்தானது உயிரிழந்த நபர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் 

அக்கரைபற்று பக்கமிருந்து வந்துகொண்டிருத்த போது அதே பக்கமாக   வந்த கென்டர் லொறியொன்று ஜி.பி.எஸ். சந்தியால்  திரும்ப  முற்பட்டபோது   வேக  கட்டுப்பாட்டை இழந்து 

மோட்டார் சைக்கிள்   லொறியில்  மோதுண்டு   மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மறுமுனையில் வந்த   துவிச்சக்கர வண்டியுடன் மோதி  தூக்கி வீசப்பட்டனர்.

இதனால்   மேட்டார் சைக்கிளில் வந்த இருவரில்  ஒருவர் சம்ப இடத்தில்  உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்  நிந்தவூர் 

ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு