2 கோடி சிறுமிகள் கல்வியை இழக்கும் அவல நிலை!! -கொரோனாவே காரணம்-

ஆசிரியர் - Editor III
2 கோடி சிறுமிகள் கல்வியை இழக்கும் அவல நிலை!! -கொரோனாவே காரணம்-

கொரோனா வைரஸ் பரவல் முடிந்தாலும் 2 கோடி சிறுமிகள் பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும் என்று மலாலா தெரிவித்துள்ளார். 

தலீபான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய பாகிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான யூசுப்சாய் மலாலா நோபல் பரிசு பெற்றவர். சர்வதேச அளவில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். 

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மலாலா அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்கள் கல்வி கற்பதை மேம்படுத்தும் கூட்டு முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும், நோய்த் தொற்று பாதிப்பு முடிவடைந்த பின்னரும் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என்றும் தெரிவித்தார். 

பெண்கள் கல்விக்கான இலக்கை எட்டுவதில் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்த அளவே சாதிக்க முடிந்து இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார். இந்த தகவலை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ‘டான்’ பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு