வெடிபொருட்களை பதுக்கிவைத்திருந்த இருவர் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கினர்..!

ஆசிரியர் - Editor I
வெடிபொருட்களை பதுக்கிவைத்திருந்த இருவர் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கினர்..!

கிளிநொச்சி - கிளாலி பகுதியில் வெடிபொருட்களை பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் பளை பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பளை பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வீதி ஓரத்தில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சந்தேகத்திற்கிடமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது பொலிசார் சோதனையிட முற்பட்டுள்ளனர். 

இதன்போது இருவரும் தப்பி செல்ல முற்பட்டுள்ளனர். குறித்த இடத்தில் பையொன்றிலிருந்து குறித்த வெடிபொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவற்றை வைத்திருந்த சந்தேகத்தில் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

27 மற்றும் 23 வயதுடைய கிளாலி பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு