கல்முனையில் முக்கிய கடற் கரைகளில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள்

ஆசிரியர் - Editor IV
கல்முனையில் முக்கிய கடற் கரைகளில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள்

அம்பாறை கல்முனை வாடி வீட்டு  கடற்­க­ரை­யில்  அன்றாடம்  இடம்­பெ­றும் சமூகச் சீர்­கே­டு­கள் தொடர்ந்து வருகின்றது.

  கடற் கரை­யில் நீண்­ட­நாட்­க­ளாக சமூக சீர்­கேடு இடம்­பெ­று­வ­தாகத் தெரி­விக்கப்படும் கடற்கரையை அண்டிய பகுதியில் கல்முனை இராணுவ முகாம் மற்றும் கடற்படையினரின் முகாம் என்பன காணப்படுகின்றன.

தற்­போது அங்கு உள்ள இராணுவ முகாம்களில்  பாது­காப்பு அரண் போடப்­பட்டுள்ள போதிலும்  இவ்வாறு சமூக சீர்கேடுகள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறான போக்கினால்   இளவயதினர் மதுவிற்கு  அடிமைகளாகக்  வருவதுடன்  பாரதூரமான சீர்கேடுகளை உருவாக்கியிருக்கிறது.

மேலும் இவ்வாறான நடவடிக்கையினால்  சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள் பாலியல் சேட்டைகள் மற்றும் முறையற்ற கர்ப்பம் தரித்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே சமூக சீர்கேடு சம்பவங்களோடு தொடர்புடையவர்களை அணுகி இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து அவர்களை விடுவித்து சமூகத்துக்கு நல்லவர்களாக மாற்ற வேண்டும் சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு