கருப்பின இளைஞர் அடித்துக் கொலை!! -வெள்ளை இனத்து இளைஞர்களின் வெறிச்செயல்-

ஆசிரியர் - Editor III
கருப்பின இளைஞர் அடித்துக் கொலை!! -வெள்ளை இனத்து இளைஞர்களின் வெறிச்செயல்-

இத்தாலியில் கருப்பின இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் ரோமின் புறநகர் பகுதியான கோலிபுரோ நகரைச் சேர்ந்த வில்லி மான்டீரோ துதர்தே என்கிற 21 வயது கருப்பின வாலிபரை வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அடித்து கொலை செய்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பிரதமர் கியூசப் காண்டே உள்பட அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வில்லி மான்டீரோ துதர்தேவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் கியூசப் காண்டே மற்றும் அந்த நாட்டின் உள்துறை மந்திரி ஆகியோரும் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

இதனிடையே கருப்பின வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு