மணிவண்ணனை விட்டு வாருங்கள் மாகாணசபையில் ஆசனம் தருகிறோம்..! குதிரை பேரம் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
மணிவண்ணனை விட்டு வாருங்கள் மாகாணசபையில் ஆசனம் தருகிறோம்..! குதிரை பேரம் ஆரம்பம்..

தமிழ்தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்ணனை ஒதுக்கியபோதும் மணிவண்ணின் ஆதரவு புலத்தை அசைக்க கூட முடியாத நிலையில் மணிவண்ணனுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலுள்ள மாநகரசபை உறுப்பினர்களுக்கு மாகாணசபை ஆசை காட்டும் குதிரை பேரத்தை தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் மணிவண்ணன் பிழை செய்துவிட்டதாக வகுப்பெடுத்துள்ளதுடன்.

மணிவண்ணனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டிலிருந்து நீங்கி தம்முடன் இணைந்து பயணித்தால் மாகாணசபையில் ஆசனம் தருவதாக கூறியிருக்கின்றனர். இதற்கிடையில் வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசும் ஒன்று தொலைபேசி வழியாக சிறந்த எதிர்காலத்திற்காக தம்முடன் இணையுமாறு கேட்டுவருகிறதாம்.

இதேவேளை வ.பார்த்தீபன் உள்ளிட்ட சில மாநகரசபை உறுப்பினர்களுடன் இந்த பேச்சுவார்த்தை இல்லை எனவும் கூறுகிறார்களாம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு