அரச திணைக்களங்கள் கையகப்படுத்தியிருக்கும் நிலங்களை மக்களிடம் மீள கொடுங்கள்..! அடுத்த போகம் மக்கள் நின்மதியாக விவசாயம் செய்யட்டும்.. டக்ளஸ் அதிரடி..

ஆசிரியர் - Editor I
அரச திணைக்களங்கள் கையகப்படுத்தியிருக்கும் நிலங்களை மக்களிடம் மீள கொடுங்கள்..! அடுத்த போகம் மக்கள் நின்மதியாக விவசாயம் செய்யட்டும்.. டக்ளஸ் அதிரடி..

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அரச திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களை விடுவித்து அடுத்த போகத்திற்கு மக்கள் நின்மதியாக விவசாயம் செய்யகூடியவகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றதன் பின்னர் இன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு முன்னாய்வு கூட்டத்தை டக்ளஸ் தேவானந்தா நடத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியதுடன், மேற்படி காணி விடயத்தை குறித்து பேசவே முன்னாயத்த கூட்டம் கூட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

இன்றைய முன்னாய்வு கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குரங்குத் தொல்லைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, 

சிறிய ரகத் துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், பயிர்செய்கைகளுக்கு நாசம் விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்று சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் மாற்று வழிகள் தொடர்பாக ஆராயுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்பவற்றின் அடிப்படையில், பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்காண்டு விவசாயத்தில் தன்னிறைவு எட்டுவதே நோக்கமாக இருககின்ற நிலையில் வன வளத் திணைக்களம், 

வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளை பயிர் செய்கைக்கு பயன்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவிற்கான முன்னாய்வுக் கூட்டத்தினை நடத்துவதற்காக 

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். இந்நிலையில் கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் கமக்கார அமைப்பின் அழைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர்,

பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது எங்களுக்கு சொந்தமான நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதியை பெற்றுத்தாருங்கள் என்று தெரிவித்துள்ள கிளி. ஆணைவிழுந்தான் கிராம அபிவித்தி சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயராஜா, 

தங்களது கிராமம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாகவும், எதிர்காலத்திலாவது கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு