மணிவண்ணன் ஊடக சந்திப்பு நடத்த முயற்சித்ததால் கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு ஓடிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி..!

ஆசிரியர் - Editor I

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.தலமை அலுவலகத்திற்குள் ஊடக சந்திப்பை நடத்துவதற்கு சட்டத்தரணி மணிவண்ணன் சென்றிருந்த நிலையில் கட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் ஊடக சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்து பதவி விலக்கப்பட்ட மணிவண்ணன் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இன்று கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ள மணிவண்ணனின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனின் ஆதரவாளர்களை வெளியேற்றியதுடன் கட்சி அலுவலகத்தை மூடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு