யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று..! 120 பேருக்கு இன்று பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று..! 120 பேருக்கு இன்று பரிசோதனை..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 120 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் (பி.சி.ஆர் பரிசோதனை) 3 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட 3 பேருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் 

*போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் -2 பேர்

* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்

* முழங்காவில் தனிமைப்படுத்தல் மையம் - 98 பேர்(மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது)

* ஆதார வைத்தியசாலை வல்வெட்டித்துறை - 3 பேர்

* பொது வைத்தியசாலை கிளிநொச்சி - 3 பேர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு