சில்லறைகளுக்காக மணிவண்ணனை துாக்கி எறியும் தீர்மானத்திற்கு வந்துள்ளதா தமிழ்தேசிய மக்கள் முன்னணி..?

ஆசிரியர் - Editor I
சில்லறைகளுக்காக மணிவண்ணனை துாக்கி எறியும் தீர்மானத்திற்கு வந்துள்ளதா தமிழ்தேசிய மக்கள் முன்னணி..?

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடக பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனிற்கும், கட்சியின் தலைமைக்குமிடையில் அண்மைக்காலமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. சுகாஷ்- மணிவண்ணன் மோதல் உச்சமடைந்த போது, கட்சித் தலைமை சுகாஷ் தரப்புடன் நின்றது.

இந்த மோதல் உச்சமடைந்த நிலையில் நேற்றிரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூட்டம் கூடியது. இதில், மணிவண்ணனை தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்த தூக்கியெறிவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் , கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. என வி.மணிவண்ணன் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு