பிரணாப் உயிருடன் இருக்கின்றார்: வந்திகளில் அவரை கொல்லாதீர்கள்!! -மகன் உருக்கமான வேண்கோள்-

ஆசிரியர் - Editor III
பிரணாப் உயிருடன் இருக்கின்றார்: வந்திகளில் அவரை கொல்லாதீர்கள்!! -மகன் உருக்கமான வேண்கோள்-

இராணுவ வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிரணாப் முகர்ஜி உயிருடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள இரத்தக்கட்டியை நீக்குவதற்கு ஆபரேசன் நடைபெற்றது. அதன்பின் டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக இராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் பரவத் தொடங்கியது. இந்நிலையில் எனது தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு