இந்தியாவில் கொரோனாவின் வெறியாட்டம்!! -ஒரு நாளில் 942 பேர் சாவு, 66,999 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor III
இந்தியாவில் கொரோனாவின் வெறியாட்டம்!! -ஒரு நாளில் 942 பேர் சாவு, 66,999 பேருக்கு தொற்று-

இந்தியாவில் தொடர்ந்தும் கொரோனா தனது ஆட்ட எண்ணிக்கையை அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமு; 66,999 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளர். 

மேலும் இந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான  942 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று 60 ஆயிரத்தையும் தாண்டி 66,999 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 23,96,638 பேர் பாதிக்கப்பட்டுள் நிலையில் 16,95,982 குணமடைந்துள்ளனர். 47,033 பேர் உயிரிழந்துள்ளனர்.  6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் குணமடைந்தோர் சதவிகிதம் 70.77 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.98 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் விகிதம் 27.27 ஆகவும் உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு