நிலச்சரிவு பலி: -55 ஆக உயர்வு-

ஆசிரியர் - Editor III
நிலச்சரிவு பலி: -55 ஆக உயர்வு-

கேரளா மாநில் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கடந்த வெள்ளிக்கிழமை மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82 றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர்.

இந்நிலையில், இன்றும் நடைபெற்றுவரும் மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த விபத்தில் இன்னும் 16 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மூணாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு