முதலாவது கொரோனா தடுப்பூசி!! -ரஸ்யா உத்தியோகபூர்வ அறிவிப்பு-

ஆசிரியர் - Editor III
முதலாவது கொரோனா தடுப்பூசி!! -ரஸ்யா உத்தியோகபூர்வ அறிவிப்பு-

உலகின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் உலக நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பூசியை வெளியிட்ட முதல் நாடு என்ற பதிவினை ரஸ்யா இன்று தனதாக்கியுள்ளது. 

ரஸ்ய ஜனாதிபதி புடின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ரஸ்யா முதல் கோரோனா வைரஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஸ்யா பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி, மனித மருத்துவ பரிசோதனைகளின் மூன்று கட்டங்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது மகள்களில் ஒருவருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டது.

சோதனைகளின் போது தடுப்பூசி திறமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கோரோனா வைரஸிலிருந்து நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்றார்.

இதற்கிடையே ரஸ்யா அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தடுப்பூசியானது முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதன் மூலம் கோரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடாக ரஸ்யா உள்ளது. இருப்பினும், ரஸ்யாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல விஞ்ஞானிகள், மாதக்கணக்கில் நீடிக்கும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்னர், அவசர அவசரமாக தடுப்பூசியை பதிவு செய்வதற்கான முடிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

மூன்றாம் கட்ட சோதனைகள் பொதுவாக சில மாதங்களுக்கு நீடிக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு