உச்சம் தொடும் கொரோனா!! -ஒரு நாளில் 62,064 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor III
உச்சம் தொடும் கொரோனா!! -ஒரு நாளில் 62,064 பேருக்கு தொற்று-

இந்தியாவில் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் உச்சம் தொட்ட நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,007 பேர் பலியாகி உள்ளனர் என்று அறிவிக்கப்படடுள்ளது. 

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 62,064 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  இதனால் மொத்த எண்ணிக்கை 22 இலட்சத்து 15 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 6 இலட்சத்து 34 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 15 இலட்சத்து 35 ஆயிரத்து 744 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 

ஒரு நாளில் 1,007 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,386 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு