24 மணி நேரத்தில் 64,399 பேருக்கு கோரோனா!! -861 பேர் சாவு-

ஆசிரியர் - Editor III
24 மணி நேரத்தில் 64,399 பேருக்கு கோரோனா!! -861 பேர் சாவு-

இந்தியாவை புரட்டிப் போடும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 64,399 பேரை தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் கொரோனாவால் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அது தற்போது 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மகாராஸ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 21,53,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,80,885 வைத்திய சாலையில் ருந்து வெளியேறிய நிலையில், 6,28,747 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 43,379 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு