லெபனால் வெடி விபத்து!! -சர்வதேச விசாரணையை நிராகரித்த அரசு-

ஆசிரியர் - Editor III
லெபனால் வெடி விபத்து!! -சர்வதேச விசாரணையை நிராகரித்த அரசு-

லெபனானில் நடந்த பாரிய வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை அந்த நாட்டு அதிபர் மைக்கேல் அவுன் நிராகரித்தார்.

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லெபனான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். 

அதேபோல், லெபனானுக்கு பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் மெக்ரோனும் சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் இதனை வலியுறுத்தியது.

இந்த நிலையில் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் நிராகரித்தார்.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் அமைச்சகம் இது தொடர்பான விசாரணையை ஏற்கனவே அறிவித்துவிட்டது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை என கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு