இராணுவ தளத்தின் மீது பாரிய குண்டு தாக்குதல்!! -8 பேர் உடல் சிதறி பலி-

ஆசிரியர் - Editor III
இராணுவ தளத்தின் மீது பாரிய குண்டு தாக்குதல்!! -8 பேர் உடல் சிதறி பலி-

சோமாலியாவில் உள்ள இராணுவ தளத்தின் மீது பாரிய குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்து கரும்புகை மண்டலம் உருவானது.

அந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் இராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் வெளிநாட்டு பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள இராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். மொகாதிசுவின் வார்ட்டா நப்பாடா மாவட்டத்தில் உள்ள இராணுவ தளத்தின் நுழைவாயிலுக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை நிறுத்தி பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். 

இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்து கரும்புகை மண்டலம் உருவானது.

இந்த குண்டு வெடிப்பில் இராணுவ தளத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 8 இராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 14 வீரர்கள் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல் - கொய்தாவுடன் தொடர்புடைய அல் பாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என சோமாலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு