திருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்..! வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..

ஆசிரியர் - Editor I

திருமதி சசிகலா ரவிராஜ் வீட்டிற்கு சென்றுள்ள அங்கஜன் இராமநாதன் மற்றும் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறுவதற்கு கட்சிபேதம் கடந்து பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். 

இன்று மாலை சாவகச்சோில் உள்ள திருமதி ரவிராஜ் சசிகலாவின் வீட்டுக்கு சென்ற இவர்கள் மிகப்பெரும் அநீதி நடந்துள்ளதாக கூறியுள்ளதுடன், அதற்கு நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், அதற்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளனர். 

குறிப்பாக மேன்முறையீட்டு நீதிமன்றில் 16ம் திகதிக்கு முன் வழக்கு தாக்கல் செய்யும்படியும் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் தன்னுடைய கட்சிக்கான விருப்பு வாக்கு தொடர்பில் வழக்கு தொடர சட்டத்தில் இடமுள்ளது. எனவே அதனை செய்து 

சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடையுத்தரவு பெறப்படவேண்டும். என கூறியுள்ளதுடன் அது தொடர்பாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்குமாறு கேட்டிருக்கின்றனர். மேலும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து இது பற்றி பேசவும், 

தமது ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டில்களை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளனர். மேலும் அங்கு கருத்து தொிவித்த சிவாஜிலிங்கம் தேர்தல் கண்காணிப்பு குழு சார்பிலும் இவ்வாறான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இதற்கிடையில் உங்கள் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டால் நீதியரசர் குழாமினால் அது கவனத்தில் கொள்ளப்படும். எனவே ஓரிரு நாட்களுக்குள் அதற்கான தீர்மானத்தை எடுங்கள். என கேட்டுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு