தாண்டவம் ஆடும்கொரோனா!! -ஒரு நாளில் 933 பேர் பலி-

ஆசிரியர் - Editor III
தாண்டவம் ஆடும்கொரோனா!! -ஒரு நாளில் 933 பேர் பலி-

இந்தியாவில் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 933 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பலியாகியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக உயர்ந்து உள்ளது.

6 இலட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 14 இலட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  ஒரே நாளில் 933 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு