யாழ்.மாவட்டத்தில் அமைதியான சுமுகமான தேர்தல்..! நாளை மாலை 6 மணிக்கு முன் பூரணமான முடிவுகளை அறிவிக்க எதிர்பார்ப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் அமைதியான தேர்தல் நடைபெற்று முடிந்திருப்பதாக கூறியிருக்கும் யாழ்.மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர் க.மகேஸன், நாளை மாலை 6 மணிக்கு முன்பதாக அனைத்து தேர்தல் முடிவுகளையும் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். 

யாழ்.மத்திய கல்லூரியில் சற்று முன்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை 

இடம்பெற்று நிறைவடைந்துள்ளது எந்தவித அசம்பாவிதமுமின்றி தேர்தலானது மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.எந்தவித வன்முறைச் சம்பவம் பதிவாகவில்லை அத்தோடு கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 

இம்முறை அதிகளவான வாக்களிப்பு இடம் பெற்றுக் கொண்டது அதாவது 67.72வீத வாக்களிப்பு பதிவாகி உள்ளது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு