யாழ்.சாவகச்சோி தொகுதியில் கள்ளவாக்கு போடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது..! நகரசபை தவிசாளரின் கணவருடைய வாக்கு கள்ளவாக்காக போடப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி தொகுதியில் கள்ளவாக்கு போடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது..! நகரசபை தவிசாளரின் கணவருடைய வாக்கு கள்ளவாக்காக போடப்பட்டுள்ளது..

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் சாவகச்சோி தொகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் கள்ள வாக்கு போடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

இதனால் வாக்களிக்க வந்தவர்கள் இடையில் குழப்பமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு 

வாக்களிக்கச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் சம்பவம் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் 

விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய வாக்கு மோசடிகள் பரவலாக இடம்பெற்றுள்ளதா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக 

பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு