யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பு சுமுகம்..! பிரமுகர்கள் காலையிலேயே வாக்களிப்பு, 10 மணிவரை 20 வீதம் பதிவு..

ஆசிரியர் - Editor I

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றுவருகின்றது. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் காலை 11 மணிவரையில் 25 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கின்றது. 

சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி மக்கள் தொடர்ந்து வாக்களிப்பில் பங்குபற்றி வருகின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும், ஈ.பி.டி.பி, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, 

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தமது வாக்குகளை செலுத்தியிருக்கின்றனர். 

குழப்பங்கள் எதுவுமற்றவகையில் மிக அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றுவருகின்றது. ஆங்காங்கே சில கட்சிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில், 

சிறிய கடதாசிகளில் அச்சிடப்பட்ட சின்னம், இலக்கம் அடங்கிய பிரசுரங்களை வீசி சென்றிருக்கின்றன. எனினும் அவை உடனடியாக அகற்றப்பட்டிருக்கின்றது. 

தொடர்ச்சியாக மக்கள் வாக்களிப்பில் பங்கு பற்றிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை வாக்களிக்காதவர்கள் சென்று உங்களுடைய வாக்குகளை அளியுங்கள். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு