காந்தியின் நினைவு நாணயம்!! -வெளியிட இங்கிலாந்து திட்டம்-

ஆசிரியர் - Editor III
காந்தியின் நினைவு நாணயம்!! -வெளியிட இங்கிலாந்து திட்டம்-

அகிம்சையில் சின்னம் மகாத்மா காந்திக்கு மதிப்பளித்து அவரை நினைவு கூறும் வகையில் அவருடைய உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.

இது குறித்து இங்கிலாந்தின் நிதி மந்திரி ரிசிசுனிக் கூறியதாவது:-

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது. மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும் பாடு பட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாக கூறினார்.

மேலும் ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயத்தை வெளியிட (ஆர்.எம்.ஏசி) முடிவு தற்போது பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு