மனைவியை கத்தியால் குத்திவிட்டு, காரால் ஏற்றி கொலை செய்த கொடூர கணவர்!!

ஆசிரியர் - Editor III
மனைவியை கத்தியால் குத்திவிட்டு, காரால் ஏற்றி கொலை செய்த கொடூர கணவர்!!

தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அவர் மீது காரை ஏற்றி கொலை செய்த கொடூர கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தின் வசித்துவந்த  மோனிப்பள்ளியை சேர்ந்தவர் மெரின் ஜாய் (வயது 26) என்பவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தாதியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக பணிக்கு சென்று வீடு திரும்பிய வேளை திடீரென்று மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக பல முறை கத்தியால் குத்தியுள்ளார். 

கத்திக்குத்திற்கு இலக்காகி வீதியில் விழுந்த அவர் மீது காரால் ஏற்றி கொலையும் செய்துள்ளார். 

இது தொடரபாக போலீசார் பிலிப்மேத்யூ (34 வயது) என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிராட் பிகொவொன் கூறுகையில், மெரரின் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, அந்த நபர் அவரை இழுத்து பல முறை கத்தியால் குத்தி உள்ளார்.இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என கூறினார்

இந்த தம்பதி கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருவதாகவும், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து வருவதால் மெரின்  மற்றும் அவரின் தாய் பிலிப்பை பார்க்கவே விடவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், பிலிப் தன் மகள் மற்றும் மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். இருப்பினும் கடந்த திங்கட் கிழமை குழந்தையை ஒரு போதும் பார்க்க உன்னை அனுமதிக்காமாட்டார்கள் என்று பிலிப்பிடம், ஜாய் கூறியதாக கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த பிலிப் மறுநாள் காலையில் வேலை முடித்து வந்த மனைவியை அந்த ஆத்திரத்தில் குத்திவிட்டதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு