கொரோனவிடம் மண்டியிடும் இந்தியா!! -ஒரு நாளில் 48 ஆயிரம் பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor III
கொரோனவிடம் மண்டியிடும் இந்தியா!! -ஒரு நாளில் 48 ஆயிரம் பேருக்கு தொற்று-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,704 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு 15 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொத்தம் 14,83,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 654 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 9,52,744 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 35175 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,96,988 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு