இறுதிப் போர் காலத்தில் மக்கள் இழந்த நகைகள், சொத்துக்களை மீள பெற்றுக் கொடுப்போம்..! எமக்கு ஆணை வழங்கினால் அது நடக்கும்..

ஆசிரியர் - Editor I
இறுதிப் போர் காலத்தில் மக்கள் இழந்த நகைகள், சொத்துக்களை மீள பெற்றுக் கொடுப்போம்..! எமக்கு ஆணை வழங்கினால் அது நடக்கும்..

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பேசுவது தமிழ்தேசியம் என்றபோதும் அவர்களிடம் நரி தந்திரமிக் கவர்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளரும், தொழிலதிபருமான விண்ணன் கூறியிருக்கின்றார். 

யாழ்.ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணை என பேசி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 

இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து நமது நரித் தந்திரம் ஆன செயற்பாடுகளினால் தமிழ்தேசிய போராட்டத்தையும் தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்து உள்ளனர். அது மட்டுமல்லாது 

சர்வதேச விசாரணையை கோரி காலங்காடத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கத்துடன் பேசியும் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். நமது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் ராமநாதன் 

தலைமையிலான நானும் பாராளுமன்றம் சென்றால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசி குறுகிய காலத்திலேயே தீர்த்து வைப்போம். மேலும் பல துன்பங்களின் மத்தியில்  சேமித்த மக்களுடைய நகைகள் போரில் காணாமல்போனது அந்த நகைகள்  

மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் இதனை அரசாங்கத்துடன் ஆணித்தரமாகப் பேசி அந்த மக்களுடைய நகைகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு அல்லது அவற்றுக்கான பணத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் 

யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது இடம்பெற்ற கொலைகளை அக்கால கட்டத்தில் இருந்த அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரைக் காட்டிலும் பல விஷ கிருமிகள் யாழ்பாணத்தில் இருந்து உள்ளனர். 

ராணுவக் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோதும் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு