அம்பாறை நிந்தவூர் இளைஞன் பரிதாபமாக மரணம்

ஆசிரியர் - Editor IV
அம்பாறை நிந்தவூர் இளைஞன் பரிதாபமாக மரணம்

அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மாலை 6.45 மணியளவில் காரைதீவு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் சம்மாந்துறை பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடுஇ சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூரை சேர்ந்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திங்கட்கிழமை(13) அன்று  கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கிட்டங்கி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு பிரிவினரின் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த துறைநீலாவணையை சேர்ந்த  தவராசா யாழினி(வயது -30) என்பவர் காயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரகின்றார்.

இச்சம்பவம் காலை இடம்பெற்றதுடன் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு