கட்டுப்பாட்டை இழந்து துாக்கி வீசப்பட்ட பட்டா..! படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி, கொக்காவிலில் இன்று அதிகாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்து துாக்கி வீசப்பட்ட பட்டா..! படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி, கொக்காவிலில் இன்று அதிகாலை சம்பவம்..

முறிகண்டி- கொக்காவில் பகுதியில் மரக்கறி ஏற்றிவந்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது.

வேக கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியை விட்டு விலகியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு