வவுனியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று..! குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
வவுனியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று..! குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில்..

பொலனறுவை- கந்தகாடு படைமுகாமில் பணியாற்றும் வவுனியா- மடுக்கந்தை பகுதியை சேர்ந்த படைச்சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

கந்தக்காடு இராணுவ முகாமில் சாரதியாக பணியாற்றும் வவுனியா மடுகந்தை பகுதியை சேர்ந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்று முன்தினம் கந்தக்காடு இராணுவ முகாமிற்கு திரும்பி சென்றபோது 

கொரோனா மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கெரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று வவுனியாவிலுள்ள அவரது மனைவி, தாயார் ,மகள் ,உறவினர் உட்பட நான்கு பேர் பேருந்தில் தனிமைப்படுத்தலுக்கு 

அழைத்து செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு