உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

ஆசிரியர் - Editor IV
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 3 ஆம் கட்ட வீடு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில்  மூன்றாம் கட்டமாக சவளக்கடை கிராம சேவகர் பிரிவில் உள்ள வி.ஜெயந்தி என்ற  பயனாளிக்கு  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இன்று (08) இடம்பெற்றது.

இவ் புதிய வீட்டிற்கான  நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில்  இடம்பெற்றது.

இப்புதிய வீட்டு நிர்மாணம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ்  ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்படவுள்ளது.நிரந்தர வீடில்லாத வறுமைக் கோட்டின் கீழ் உள்ளஇ சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடமைப்பு நிர்மாணத்திற்கான குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்விற்கு அதிதியாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை  கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம் இப்ராஹிம்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி  ஆர்.லதாகரன்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் மோ.ஜயபோசன்  கிராம சேவையாளர் வி.ராகுலன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.ரூபவாணி உட்பட பயனாளி குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு