சண்டியர்களாக மாறிய மருத்துவர்கள்..! வைத்தியசாலைக்குள் அடிதடி, சொத்துக்கள் சேதம், இருவரும் ஆளுக்கொரு வைத்தியசாலையில் படுத்துக்கொண்டனர்..

ஆசிரியர் - Editor IV
சண்டியர்களாக மாறிய மருத்துவர்கள்..! வைத்தியசாலைக்குள் அடிதடி, சொத்துக்கள் சேதம், இருவரும் ஆளுக்கொரு வைத்தியசாலையில் படுத்துக்கொண்டனர்..

அம்பாறை- நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இரு மருத்துவர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் மோதலாக மாறிய நிலையில் இருவரும் சண்டியர்களாக மாறி மோதிக்கொண்டனர். 

மோதல் முடிந்தவுடன் இரு மருத்தவர்களும் ஏட்டிக்குபோட்டியாக ஆளுக்கொரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். 

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

இரு மருத்துவர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பணி நிமிர்த்தம் இரு மருத்துவர்களும் வைத்தியசாலைக்கு சமூகமளித்த நிலையில் கடமை அறிக்கையிடும் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலில் ஆரம்பித்து கைகலப்பில் முடிவடைந்துள்ளது.

இதன்போது  வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் கதிரைகளும் உடைந்துள்ளன.

இச்சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் காயமடைந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை விடுதியில் ஒரு மருத்துவரும்,

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மற்றுமொரு மருத்துவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு