இயக்கச்சி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு குடும்பஸ்த்தர் கைது..! தீவிரமாக தொடரும் தேடுதல்..

ஆசிரியர் - Editor I
இயக்கச்சி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு குடும்பஸ்த்தர் கைது..! தீவிரமாக தொடரும் தேடுதல்..

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இராமநாதபும் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினசிங்கம் கமலகரன் என்ற 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று இரவு கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் படையினரால் கைது செய்யப்பட்டு இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3ம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தை அடுத்து வெடிப்பு இடம்பெற்ற அவரது வீடு பொலிசார் மற்றும் படையினரினால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அங்கிருந்து பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்ட குண்டு 2, கரும்புலி நாள் போஸ்ரர் 1, தொலைபேசி 1,கணனி 1,டொங்குள் 1,பென்டிரைவ் 1,சிடி 1 ஆகியன மீட்கப்பட்டன.

குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதை அடுத்து வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவரின் மனைவியான பெண் ஆசிரியை ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், புலனாய்வு பிரிவினர், பொலிசார் மற்றும் படையினரால் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு