மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா- அதிகாரிகள் கடலுக்குள் விட்டனர்.

ஆசிரியர் - Admin
மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா- அதிகாரிகள் கடலுக்குள் விட்டனர்.

அம்பாறை - நிந்தவூர் கடலில் இன்று காலை கரைவலை மீனவர்களின் வலையில் 15 அடி நீளமான இராட்சத சுறா சிக்கியுள்ளது. சுமார் 1500 கிலோ நிறையையுடைய இந்த இராட்சத மீன் கொடுப்புளி சுறா இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என மீனவர்கள் கூறுகின்றனர்.

மீன்பிடி அதிகார சபை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து மீனை வலையில் இருந்து கழட்டி மீண்டும் கடலில் விடுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து அந்த இராட்சத மீன் கடலுக்குள் விடப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு