பூநகரியில் மீண்டும் கோர விபத்து..! டிப்பர் மோதியதில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
பூநகரியில் மீண்டும் கோர விபத்து..! டிப்பர் மோதியதில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..

கிளிநொச்சி பூநகரி- தம்பிராய் பகுதியதில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலெயே உயிரிழந்துள்ளார். 

3 சக்கர மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் துக்கி வீசப்பட்ட 3 சக்கர மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியுள்ளது. 

சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது 3 சக்கர மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

மேலும் பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் பல்கலைகழக மாணவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு