கட்டுப்பாடற்ற வேகம்..! நாவல் மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள், இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்..! நாவல் மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள், இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

கிளிநெச்சி- அக்கராயன் பகுதியில் கட்டுப்பாடற்ற வேகத்தால் வீதியைவிட்டு விலகிய மோட்டார் சைக்கிள் நாவல் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 19 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்துள்ளனர். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் நின்ற நாவல் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஸ்கந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மோகன் றஜீபன் என்ற 19 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளான். உயிரிழந்த இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றொரு இளைஞன் காயங்களுடன் தப்பியுள்ளார்.

இறந்தவரின் சடலம் தற்போது அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு