டெலிகாம் பிராந்திய அலுவலகத்தினால் மாபெரும் பால் பாக்கட் அன்னதான நிகழ்வு

ஆசிரியர் - Editor IV
டெலிகாம் பிராந்திய அலுவலகத்தினால் மாபெரும் பால் பாக்கட் அன்னதான நிகழ்வு

அம்பாறை மாவட்டம்  கல்முனை டெலிகாம் பிராந்திய அலுவலகத்தினால் மாபெரும் பால் பாக்கட் அன்னதான நிகழ்வு கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள டெலிகாம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

 இன் நிகழ்வு இன்று(4)  கல்முனை  சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்னயின் ஆன்மீக  உரையினை தொடர்ந்து ஆரம்பமானது.  இந்நிகழ்வில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன்  அன்னதான நிகழ்வானது  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின்   அறிவுறுத்தல்களுக்கமைய சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.

மேலும் இவ்அலுவலகத்தில் நாளை(5)   மாபெரும் இரத்ததான நிகழ்வு இடம்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  இவ் உயிர் காக்கும் உத்தம இரத்ததான நிகழ்வில்  அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கல்முனை டெலிகாம் நிறுவனம் கேட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு