கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் வீடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு..! ஒருவர் ஆபத்தான நிலையில், பொலிஸ், இராணுவம் குவிக்கப்பட்டு விசாரணை..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் வீடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு..! ஒருவர் ஆபத்தான நிலையில், பொலிஸ், இராணுவம் குவிக்கப்பட்டு விசாரணை..

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் பளை பொலிஸார் நேற்று இரவு குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த நபர் 

வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது அது தவறுதலாக வெடித்திருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு