24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு தொற்றிய கொரோனா!! -இந்தியாவில் தொற்று உச்சம்-

ஆசிரியர் - Editor III
24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு தொற்றிய கொரோனா!! -இந்தியாவில் தொற்று உச்சம்-

இந்தியாவில் கடந்த சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில்  இன்று  கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரே நாளில் 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்து 315  ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பிலிருந்து  3,94,227 பேர் குணமடைந்துள்ள நிலையில்,  2,35,433 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு