லடாக் எல்லையில் மோடி செய்த ஆராய்வு!! -பரபரப்பை ஏற்படுத்திய விடயம்-

ஆசிரியர் - Editor III
லடாக் எல்லையில் மோடி செய்த ஆராய்வு!! -பரபரப்பை ஏற்படுத்திய விடயம்-

சீனாவுடன் மோதல் வலுத்து வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீரென லடாக் எல்லைக்குச் சென்று ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

லடாக் எல்லையில் நடந்த மோதலையடுத்து இரு நாடுகளிடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இந்த நிலையில், லடக் எல்லையில் பிரதமர் மோடி திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். 

இராணுவ பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றை ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்தார். பிரதமர் மோடியுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் உடன் இருந்தார்.

எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு