75 கள்ள வாக்குபோட்ட சி.சிறீதரன்..! யாழ்.தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு, யாழ்.பொலிஸாரின் கவனத்திற்கும் கூறப்பட்டது..

ஆசிரியர் - Editor I
75 கள்ள வாக்குபோட்ட சி.சிறீதரன்..! யாழ்.தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு, யாழ்.பொலிஸாரின் கவனத்திற்கும் கூறப்பட்டது..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு எதிராக சிறீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளரும், சட்டத்தரணியுமான ஸ்ரனிஸ்லஸ் செலஸ்டினி தேர்தல் திணைக்களத்தில் முறையிடப்பட்டதுடன், யாழ்.பொலிஸாருக்கும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் போட்டதாக கூறியிருந்த கருத்து தொடர்பாகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

இன்று மாலை இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் 75 கள்ள வாக்குகள் போட்டதாக கூறியிருந்த கருத்து பல்வேறு மட்டங்களில் கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு