திடீரென வெடித்த அனல் மின் நிலையம்!! -5 தொழிலாளர்கள் பலி-

ஆசிரியர் - Editor III
திடீரென வெடித்த அனல் மின் நிலையம்!! -5 தொழிலாளர்கள் பலி-

நெய்வேலி என்.எல்.சியின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் திடீரென ஏற்பட் வெடிப்புச் சம்பவத்தில் பரவிய தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை சிப்டில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

இவர்களில் 5 பேர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் கடந்த ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு