குளத்தில் குளித்தவரின் உடலை கிளித்து புகுந்த அட்டைபூச்சி!! -அரை லீட்டர் இரத்தம் குடித்த நிலையில் வைத்தியர்களால் மீட்கப்பட்டது-

ஆசிரியர் - Editor III
குளத்தில் குளித்தவரின் உடலை கிளித்து புகுந்த அட்டைபூச்சி!! -அரை லீட்டர் இரத்தம் குடித்த நிலையில் வைத்தியர்களால் மீட்கப்பட்டது-

குளத்தில் ஆடை இல்லாமல் நீச்சநீச்சல் அடித்துக் கொண்டிருந்தவரின் உடலை கிளித்து உட்புகுந்த அட்டைபூச்சி அரை லிட்டர் இரத்ததை குடித்ததுள்ளது. 

இரத்தம் ஒழுக ஒழுக வைத்தயி சாலைக்கு சென்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள் அட்டைப்பூச்சியை அகற்றி குறித்த நபருடைய உயிரை காப்பாற்றியுள்ளனர். 

கம்போடியாவின் புனோம் பென்னில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே இருந்த குளத்தில் ஆடையின்றி குளித்துள்ளார். அப்போது அவர் உறுப்பு காயமடைந்து இரத்தம் வந்துள்ளது. ஏதேனும் பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்த முதியவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் 

மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்துள்ளனர்.  தொடர்ந்து அவரது உறுப்பில் வலி இருந்துள்ளது. இதையடுத்து சிறிய கேமிரா வழியாக சிறுநீர்ப்பையை சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அட்டை பூச்சி 500 மில்லிக்கு அதிகமான இரத்தத்தை உறிஞ்சியதால் அதனை வெளியேற்ற மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். 

ஒரு நாள் முழுவதும் முதியவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின் அவர் குணமடைந்து உள்ளார். இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், சீனாவின் நெய்ஹைர் நகரில் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து அட்டைப்பூச்சி  வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு